என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 130 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்18 Jan 2022 3:46 AM GMT (Updated: 18 Jan 2022 3:46 AM GMT)
திருவள்ளூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 130 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருவள்ளூர்:
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என அரசு அறிவித்திருந்தது. இதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் உத்தரவின்படி 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 13 இன்ஸ்பெக்டர்கள், 112 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 325 போலீசார், 200 ஊர்காவல் படையினர் என மொத்தம் 655 பேர் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த ஊரடங்கால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடியது. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வந்தவர்களை மட்டும் போலீசார் அனுமதித்தனர். மேலும் முக கவசம் அணியாமல் சுற்றி திரிந்ததாக 125 வழக்குகளும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் விதியை மீறியதாக 5 வழக்குகள் என 130 வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X