search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் கஞ்சா விற்ற வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது

    கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் கஞ்சா விற்ற வடமாநில வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் அடுத்த சிந்தலகுப்பம் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சிப்காட் போலீசார் அங்கு அதிரடியாக சென்று ஆய்வு செய்தனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ஓடிசாவை சேர்ந்த ரமேஷ் மாஜித் (வயது 42), சாய்ராம் லிங்கா (24) ஆகிய 2 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மொத்தம் 5 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×