என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நீரில் மூழ்கி பள்ளி ஆசிரியர் பலி
Byமாலை மலர்15 Jan 2022 8:59 AM GMT (Updated: 15 Jan 2022 8:59 AM GMT)
நிலக்கோட்டை அருகே வைகையாற்றில் மூழ்கி பள்ளி ஆசிரியர் பலியானார்
நிலக்கோட்டை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆனந்தநகரை சேர்ந்தவர் வீரசிவா (வயது36). இவர் உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி தனது நண்பர்கள் 4 பேருடன் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்தார்.
அப்போது அணைப்பட்டி வைகையாற்றில் இறங்கி குளித்தனர். திடீரென ஆழமான பகுதிக்கு சென்ற வீரசிவா நீரில் மூழ்கி தத்தளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தனர்.
இது குறித்து நிலக்கோட்டை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ஜோசப் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் அதற்குள் வீரசிவா நீரில் மூழ்கி பலியானார். அவரது உடலை மீட்டு நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆனந்தநகரை சேர்ந்தவர் வீரசிவா (வயது36). இவர் உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி தனது நண்பர்கள் 4 பேருடன் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்தார்.
அப்போது அணைப்பட்டி வைகையாற்றில் இறங்கி குளித்தனர். திடீரென ஆழமான பகுதிக்கு சென்ற வீரசிவா நீரில் மூழ்கி தத்தளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தனர்.
இது குறித்து நிலக்கோட்டை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ஜோசப் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் அதற்குள் வீரசிவா நீரில் மூழ்கி பலியானார். அவரது உடலை மீட்டு நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X