என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தூத்துக்குடியில் மீனவர் அடித்து கொலை
Byமாலை மலர்13 Jan 2022 5:11 AM GMT (Updated: 13 Jan 2022 5:11 AM GMT)
தூத்துக்குடியில் மீனவர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? அவருடன் மதுக்குடித்தவர்கள் யார்-யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்துநகர் சமர்ரியாஸ் நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 31), மீனவர். இவரது மனைவி இளையரசி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடி முருகேசன் நகர் அருகே உள்ள காட்டுப்பகுதியில் இன்று காலை அலெக்ஸ் இறந்துகிடந்தார். அவரது தலையில் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
இதைப்பார்த்து அங்கு சென்றவர்கள் உடனடியாக சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அப்போது அங்கு மதுபாட்டில்கள் மற்றும் டீசல் கேன்களும் கிடந்தது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நேற்று இரவு அலெக்ஸ் நண்பர்களுடன் மது குடிக்க சென்றதும் அப்போது ஏற்பட்ட தகராறில் கற்களால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
அவர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? அவருடன் மதுக்குடித்தவர்கள் யார்-யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி தாளமுத்துநகர் சமர்ரியாஸ் நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 31), மீனவர். இவரது மனைவி இளையரசி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடி முருகேசன் நகர் அருகே உள்ள காட்டுப்பகுதியில் இன்று காலை அலெக்ஸ் இறந்துகிடந்தார். அவரது தலையில் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
இதைப்பார்த்து அங்கு சென்றவர்கள் உடனடியாக சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அப்போது அங்கு மதுபாட்டில்கள் மற்றும் டீசல் கேன்களும் கிடந்தது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நேற்று இரவு அலெக்ஸ் நண்பர்களுடன் மது குடிக்க சென்றதும் அப்போது ஏற்பட்ட தகராறில் கற்களால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
அவர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? அவருடன் மதுக்குடித்தவர்கள் யார்-யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X