search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fishermen murder"

    தூத்துக்குடியில் நள்ளிரவில் கள்ளக்காதலி வீட்டில் மீனவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தை சேர்ந்தவர் சகாயமணி(வயது35). மீனவர். இவருக்கு திருமணம் ஆகவில்லை. அதேபகுதியை சூசை மரியம்நகரை சேர்ந்தவர் மைக்கேல்ஜெயராஜ்(47). இவரது மகள் கலா(26). இவரை கீழ சண்முகபுரத்தை சேர்ந்த பெரியசாமி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். பெரியசாமி திருப்பூரில் வேலை செய்து வருகிறார்.

    இதனால் கலா தனது தந்தை ஊரான சூசை மரியம் நகரில் தந்தையின் வீடு அருகே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். அப்போது சகாயமணிக்கும், கலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி கலாவின் வீட்டுக்கு சென்ற சகாயமணி கலாவை தனிமையில் சந்தித்து பேசி வந்தார்.

    இந்த விவரம் அக்கம்பக்கத்தினர் மூலமாக மைக்கேல் ஜெயராஜூக்கு தெரியவந்தது. அவர் தனது மகளையும், சகாயமணியையும் கண்டித்தார். எனினும் அவர்களது கள்ளக்காதல் நீடித்தது. இந்த நிலையில் சகாயமணி நேற்று இரவு கலாவின் வீட்டுக்கு சென்றார். அங்கு நள்ளிரவுவரை கலாவுடன் இருந்தார்.

    இதை அறிந்த மைக்கேல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் நிகோலஸ் மணி ஜான்சன்(20), இன்னொரு மகன் ஆகிய 3 பேர் அங்கு சென்றனர். அப்போது அவர்களுக்கும் சகாயமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த மைக்கேல்ஜெயராஜ் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து சகாயமணியை கம்பாலும், கைகளாலும் தாக்கினர். இதில் பலத்தகாயம் அடைந்த சகாயமணி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    இதுபற்றி தருவைகுளம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சகாயமணியை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து மைக்கேல் ஜெயராஜ், நிகோலஸ்மணி ஜான்சன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலை சம்பவம் தருவைகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடப்பாக்கம் அருகே மீனவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    கடப்பாக்கம் அருகே உள்ள ஆலம்பறை குப்பத்தைச் சேர்ந்தவர் தேசிங்கு (வயது 33). மீனவர். நேற்று இரவு அவர் கடப்பாக்கம் சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    வீட்டின் அருகே வந்த போது 10 பேர் கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே தேசிங்கு பரிதாபமாக இறந்தார்.

    சூனாம்பேடு போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் சினிமா சூட்டிங்கிற்கு வருபவர்கள் கொடுக்கும் பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்தது.

    கடந்த 6 மாதத்துக்கு முன்பு ஆலம்பறை குப்பம், கடப்பாக்கம் குப்பம், ஆலம்பறை கோட்டையில் சினிமா சூட்டிங்கிற்கு வந்தவர்கள் பணம் கொடுத்துள்ளனர்.

    இந்த பணத்தை பிரிப்பதில் மீனவ கிராமங்களிடையே மோதல் ஏற்பட்டது. எனவே இந்த தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த முன் விரோதத்தில் தேசிங்கை தீர்த்து கட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக 5 பேரை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    மீனவர் கொலையால் ஆலம்பறை குப்பம் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தூத்துக்குடி அருகே மீனவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை- மகன்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் 125 வீடு காலனி பகுதியை சேர்ந்த மீனவர் தொம்மை அந்தோணி (வயது 33). தொம்மை அந்தோணியின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மைக்கேல்சாமி (48). டிரைவராக பணிபுரிந்து வரும் இவர் தொம்மை அந்தோணி வீட்டின் பின்புறம் உள்ள காலியிடத்தில் கடந்த ஒரு ஆண்டாக பன்றிகளை பட்டி போட்டு அதில் அடைத்து வளர்த்து வருகிறார்.

    தொம்மை அந்தோணிக்கு 4 குழந்தைகள் இருந்தனர். அவர்களில் 2 குழந்தைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் பாதித்து இறந்துவிட்டனர். தனது வீட்டின் பின்னால் மைக்கேல் சாமி பன்றிகள் வளர்த்ததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்பரவி தனது குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததாக தொம்மை அந்தோணி கருதினார்.

    இதனால் அவர் அந்த பட்டியை அகற்றுமாறு மைக்கேல் சாமியிடம் கூறி வந்தார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதின் காரணமாக முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் வந்த தொம்மை அந்தோணி, தனது வீட்டுக்கு பின்னால் இருந்த பன்றிகள் வளர்க்கப்பட்ட பட்டிக்கு தீவைத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதனையறிந்த மைக்கேல் சாமி தனது மகன்கள் மற்றும் உறவினர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று தொம்மை அந்தோணியிடம் தகராறு செய்தார். தகராறு முற்றவே அவர்கள் மீன் வெட்டும் கத்தியால் தொம்மை அந்தோணியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு தர்மலிங்கம், குளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். தொம்மை அந்தோணி கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கொலையாளிகளை பிடிக்க விளாத்திகுளம் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்நிலையில் மைக்கேல் சாமி, அவரது மகன்கள் நெப்போலியன் (24), ஜான்சன் (21), உறவினர் ஜெயராஜ் (36), அவரது அண்ணன் தனபால் (42) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். கொலை குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    பாகூர் அருகே மதுகுடிக்கும் போது தகராறில் மீனவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாகூர்:

    சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது47), மீனவர். இவருக்கு 2 மனைவிகள் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக ஸ்ரீதர் புதுவை வீராம்பட்டினம் நாகூரான் தோட்டம் பகுதியில் உள்ள உறவினர் முருகன் வீட்டில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தார்.

    மதுகுடிக்கும் பழக்கம் உள்ள ஸ்ரீதர் நேற்று இரவு வீராம்பட்டினத்தில் உள்ள சாராய கடைக்கு சென்றார். அங்கு சராயம் குடித்து கொண்டு இருந்த போது இவருக்கும் வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பை சேர்ந்த கமல் (35) என்ற வாலிபருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது கமலை ஸ்ரீதர் தாக்கினார்.

    இதனால் ஸ்ரீதர் மீது கமல் ஆத்திரத்தில் இருந்து வந்தார். இன்று அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீதர் சாராயம் குடிக்க சாராயக்கடைக்கு சென்றார். அப்போது அங்கு இருந்த கமலுக்கும், ஸ்ரீதருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கமல் அங்கிருந்த சோடா பாட்டிலை உடைத்து ஸ்ரீதரின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து ஸ்ரீதர் இறந்து போனார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல்அல்வால், போலீஸ் சூப்பிரண்டு அப்துல்ரஹீம் ஆகியோரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்ததும் கமல் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் பிடித்து வந்து விசாரித்து வருகின்றனர்.

    தூத்துக்குடி மீனவர் கொலையில் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Murder

    முள்ளக்காடு:

    தூத்துக்குடி அருகே உள்ள வடக்கு சோட்டையன் தோப்பை சேர்ந்தவர் முருகேசன்(வயது 41). மீனவரான இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், ஸ்ரீநாத், ஜீவாநாத் என்ற மகன்களும் உள்ளனர். முருகேசனின் சித்தப்பா தங்கபாண்டி கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் முள்ளக்காடு நேருஜிநகரை சேர்ந்த மாரிச்சாமி(44) என்பவர் சேர்க்கப்பட்டு இருந்தார். இதனால் முருகேசன், பழிக்குப் பழியாக மாரிச்சாமியை கொலை செய்ய திட்டமிட்டார். அதற்கான தகுந்த நேரத்துக்காக காத்துக்கொண்டு இருந்தார்.

    இந்த நிலையில் முருகேசன் மாரிச்சாமியை கொலை செய்வதற்காக தசார பக்தர் போல வேடமணிந்தார். முள்ளக்காடு முனியசாமி நகரில் உள்ள கோவில் அருகே காணிக்கை வசூலிப்பது போல் வந்தார். அப்போது அந்த வழியே மாரிச்சாமி வந்தார். அவருக்கு முருகேசனை அடையாளம் தெரியாததால், அருகே வந்து நின்றார். அப்போது, முருகேசன் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் அவரை வெட்டினார். இதில் மாரிச்சாமி காயம் அடைந்தார். காயம் அடைந்த அவர் சுதாரித்துக் கொண்டு, அவரிடம் இருந்து தப்பினார்.

    பின்னர் அருகில் நின்று கொண்டு இருந்தவர்களுடன் இதுபற்றி கூறினார். இதையடுத்து அவர்களும், மாரிச்சாமியும் சேர்ந்து முருகேசனை கல்லால் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த முருகேசனை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். முருகேசன் அரிவாளால் வெட்டியதில் காயமடைந்த மாரிசாமியை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து மாரிசாமியை கைது செய்தனர். அவருடன் சேர்ந்து கொலையில் ஈடுபட்ட மூக்காண்டி(39), சரவணன், அந்தோணிராஜ் மற்றும் ஒருவரையும் போலீசார் கைது செய்தார்கள்.

    கைதான மாரிச்சாமி போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில், ‘‘பழிக்குப் பழியாக கொலை செய்ய திட்டமிட்டு முருகேசன் வந்தார். அவர் வேடமணிந் திருந்ததால் அதுபற்றி தெரியவில்லை. அவர் என்னை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதனால் அவரிடமிருந்து தப்பிக்க நான் பதிலுக்கு அருகில் நின்றவர்களையும் அழைத்து கல்லால் தாக்கி கொலை செய்தேன்’’ என்று கூறியுள்ளார்.

    ×