என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கடப்பாக்கம் அருகே மீனவர் வெட்டிக்கொலை
மதுராந்தகம்:
கடப்பாக்கம் அருகே உள்ள ஆலம்பறை குப்பத்தைச் சேர்ந்தவர் தேசிங்கு (வயது 33). மீனவர். நேற்று இரவு அவர் கடப்பாக்கம் சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
வீட்டின் அருகே வந்த போது 10 பேர் கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே தேசிங்கு பரிதாபமாக இறந்தார்.
சூனாம்பேடு போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் சினிமா சூட்டிங்கிற்கு வருபவர்கள் கொடுக்கும் பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்தது.
கடந்த 6 மாதத்துக்கு முன்பு ஆலம்பறை குப்பம், கடப்பாக்கம் குப்பம், ஆலம்பறை கோட்டையில் சினிமா சூட்டிங்கிற்கு வந்தவர்கள் பணம் கொடுத்துள்ளனர்.
இந்த பணத்தை பிரிப்பதில் மீனவ கிராமங்களிடையே மோதல் ஏற்பட்டது. எனவே இந்த தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த முன் விரோதத்தில் தேசிங்கை தீர்த்து கட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக 5 பேரை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
மீனவர் கொலையால் ஆலம்பறை குப்பம் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்