என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தோட்டத்தில் திருட முயன்றவர் அடித்துக் கொலை- சடலம் ஆற்றில் வீச்சு
Byமாலை மலர்12 Jan 2022 4:34 PM GMT (Updated: 12 Jan 2022 4:34 PM GMT)
முதற்கட்ட விசாரணையில், இறந்து கிடந்த நபர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
கோவை:
கோவை புறநகர்ப்பகுதியான பூலுவம்பட்டியில் உள்ள நொய்யல் ஆற்றில் ஒரு ஆண் சடலம் மிதந்தது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், இறந்து கிடந்த நபர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அந்த நபர் சித்திரைச்சாவடியில் உள்ள ஒரு தோட்டத்தில் திருட முயன்றபோது, அவரை அங்கிருந்த தொழிலாளர்கள் பிடித்து கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அந்த நபர் இறந்துபோனார். பின்னர் உடலை ஆற்றில் வீசி உள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த கொலை தொடர்பாக, தோட்டத்தில் வேலை செய்த 10 தொழிலாளர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்திவருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X