search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நிதிநிறுவனம் நடத்தி ரூ.50 கோடி மோசடி செய்ததாக தொழில் அதிபர் மீது புகார்

    நிதிநிறுவனம் நடத்தி ரூ.50 கோடி வரை மோசடி செய்துள்ளதாக நெல்லையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் மீது நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கேரளாவை சேர்ந்த பெண்கள் சிலர் புகார் அளித்துள்ளனர்.
    நெல்லை:

    கேரளாவை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பெண்கள் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நெல்லையை சேர்ந்த ஒரு லாட்ஜ் உரிமையாளர் ஒரு தனியார் நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். நெல்லையில் அதன்தலைமை அலுவலகம் செயல்படும் நிலையில் அதன் கிளைகள் கேரளாவின் பல இடங்களில் உள்ளது.

    இந்த நிதிநிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் அது இரட்டிப்பாகும் என அவர்கள் கூறினார்கள். அதன்படி தொடக்கத்தில் சிலருக்கு அவர்கள் பணம் கொடுத்தனர். 

    இதனால் கேரளாவை சேர்ந்த ஏராளமானோர் அந்த நிறுவனத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்தோம். ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் பெயரை அவர்கள் மாற்றினர்.

    பின்னர் அந்த புதிய நிறுவனத்தில் உங்களுக்கு பணம் தருவதாக கூறியதோடு குறிப் பிட்ட சிலருக்கு பணத்திற்கான காசோலை வழங்கினர்.

     ஆனால் அந்த காசோலை பணம் இல்லாமல் திரும்பி வந்தது. இந்த சூழ்நிலையில் நிதிநிறுவன உரிமையாளர் திடீரென மாயமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அவரை சந்தித்து இதுகுறித்து கேட்டோம். 

    அப்போது எங்களை ஒரு லாட்ஜில் தங்க வைத்து சில நாட்களில் பணம் தருவதாக கூறினார்கள். ஆனால் கூறியபடி அவர் தரவில்லை. 

    எங்களிடம் சுமார் ரூ.50 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளார். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×