என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆயுதங்களுடன் பதுங்கிய ரவுடி உள்பட 3 பேர் கைது
Byமாலை மலர்12 Jan 2022 11:07 AM GMT (Updated: 12 Jan 2022 11:07 AM GMT)
அவனியாபுரம் மற்றும் விளாச்சேரியில் ஆயுதங்களுடன் பதுங்கிய ரவுடி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் சமூக விரோத செயலை ஒடுக்க போலீசார் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி தற்போது போலீசார் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர்.திருநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் விளாச்சேரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மந்தை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை நடத்தினர்.
அப்போது அவர் குற்ற சம்பவங்களில் ஈடுபட ஆயுதங்களை வைத்திருந்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அந்த நபர் விளாச்சேரி பசும்பொன் தெருவை சேர்ந்த சிங்கராஜ் மகன் அஜித்குமார் (வயது 27) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இதே போல் அவனியாபுரம் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் அருண் ரோந்து சென்றபோது எம்.எம்.சி. காலனியில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த ஒத்தக்கடை வீரபாண்டி(24), அவனியாபுரம் திருப்பதி நகர் 2&வது தெருவை சேர்ந்த சேகர் மகன் தேசிகன்(19) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X