என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனைவி புகார்
Byமாலை மலர்12 Jan 2022 9:12 AM GMT (Updated: 12 Jan 2022 9:12 AM GMT)
சந்தியா அவினாசி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
அவினாசி:
அவினாசியை அடுத்துள்ள எஸ்.மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி சந்தியா ( வயது 29) . இவர் அவினாசி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரும் இவரது உறவினர்களும் நேற்று இரவு அவினாசி அனைத்து மகளிர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு புகார் கொடுத்தனர்.
அந்த புகாரில் கூறியிருப்பதாவது:
எனக்கும் கருமாபாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் (32) என்பவருக்கும் கடந்த 15.11.2021ம் ஆண்டு முறைப்படி திருமணம் நடந்தது. இந்த நிலையில் என்னை பிடிக்கவில்லை, என்னுடன் வாழப் பிடிக்கவில்லை என்று எனது கணவர் அவரது குடும்பத்தினரின் பேச்சை கேட்டு என்னை பெண் என்றும் பாராமல் உடலளவிலும், மனதளவிலும் பாதிப்பை உண்டாக்கி என்னுடன் வாழ மறுக்கிறார்கள்.
எனவே எனது கணவர் மீதும், அவரது உறவினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளார். புகாரின்பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X