என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வைகுண்ட ஏகாதசி - திருப்பூர் பெருமாள் கோவில்களில் நாளை சொர்க்கவாசல் திறப்பு
Byமாலை மலர்12 Jan 2022 5:37 AM GMT (Updated: 12 Jan 2022 10:45 AM GMT)
திருப்பூர் ஸ்ரீவீரராகப்பெருமாள் கோவிலில் நாளை 13-ந்தேதி வைகுண்ட ஏகாதாசி விழா, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன. ஸ்ரீரங்கம் கோவிலை பின்பற்றும் சில கோவில்களில் மட்டும் கடந்த கார்த்திகை மாத ஏகாதசியிலேயே சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் நடைபெற்றது.
திருப்பூர் ஸ்ரீவீரராகப்பெருமாள் கோவிலில் நாளை 13-ந்தேதி வைகுண்ட ஏகாதாசி விழா, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 4-ந் தேதி முதல் பகல்பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து, கூடாரை வெல்லும் உற்சவமும், மோகினி அலங்காரத்தில் எம்பெருமாள் காட்சியளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. நாளை 13-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீவீரராகவப்பெருமாள் உற்சவருக்கு, மகா திருமஞ்சனம் நடைபெறுகிறது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தாயார்களுடன் எம்பெருமாள் காட்சியளிக்கிறார். தொடர்ந்து, கருடவாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் எம்பெருமாள் சொர்க்கவாசல் வழியாக சென்று நம்மாழ்வார் மற்றும் பக்தர்களுக்கு காட்சியளிக்க இருக்கிறார்.
கொரோனா பாதுகாப்பு கட்டுப்பாடுகளை பின்பற்றி விழாவை நடத்திட கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இதேப்போல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது. இதையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X