என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பஸ் நிலையத்தில் தவித்த குழந்தை மீட்பு
Byமாலை மலர்11 Jan 2022 11:58 AM GMT (Updated: 11 Jan 2022 11:58 AM GMT)
அரூர் அருகே பஸ் நிலையத்தில் தவித்த சிறுவன் மீட்கப்பட்டான்.
அரூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பாவக்கல் பகுதியை அடுத்த எட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு. இவரது மனைவி வசந்தா. இவர்களது 3 வயது மகன் சபரி. இவர்கள் கோவையில் கூலி வேலை செய்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு திரும்பிய வசந்தா மற்றும் அவரின் தாய், தந்தை ஆகியோர் பஸ் மூலமாக அரூர் வந்தனர். பின்பு தனியார் பஸ் மூலம் ஆண்டியூர் கிராமத்திற்கு சென்று பஸ்சை விட்டு இறங்கும் போது சிறுவன் சபரியை தவற விட்டனர்.
பெற்றோரை காணாமல் சிறுவன் சபரி சுமார் 2 மணி நேரமாக கண்ணீர் மல்க அழுதுகொண்டிருந்தான். இதை பார்த்து அங்கு இருந்த பயணிகள் பரிதாபப்பட்டு சிறுவனை மீட்டு அதிவிரைவு படை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதனிடையே குழந்தையை காணாமல் தவித்த பெற்றோர் பஸ் நிலையத்தில் நாலாபுறமும் தேடினர். அப்போது போலீசாரிடம் மகன் பத்திரமாக இருப்பதை அறிந்த வசந்த மகிழ்ச்சியில் ஆனந்தகண்ணீர்விட்டார்.
பின்னர் பெற்றோரிடம் சிறுவனை போலீசார் ஒப்படைத்தனர். சிறுவனை கண்ட மகிழ்ச்சியில் பெற்றோர் அதிவிரைவு படை போலீசாரின் மனதாபிமான செயலுக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X