search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரிவாள் வெட்டு
    X
    அரிவாள் வெட்டு

    மாளந்தூர் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக வாலிபரை சரமாரியாக அரிவாள் வெட்டு

    மாளந்தூர் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக வாலிபரை சரமாரியாக அரிவாளால் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கல்பட்டு கிராமத்தில் எம்ராய்டிங் தொழில் செய்து வருபவர் மணிகண்டன்(வயது30) ஆவார்.இவர் நேற்று முன்தினம் இரவு மாளந்தூர் கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானம் அருகே தனது நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது ஆவாஜிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கௌரிசங்கர்(வயது33) என்பவர் மாளந்தூர் விளையாட்டு மைதானம் அருகே வந்தார்.அங்கு நின்று பேசிக்கொண்டிருந்த மணிகண்டனை பார்த்தார். முன்விரோதம் காரணமாக ஆத்திரத்தில் இருந்த கௌரிசங்கர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மணிகண்டனை தலையில் சரமாரியாக வெட்டினார். இதனால் கூக்குரலிட்ட வண்ணம் ரத்த வெள்ளத்தில் மணிகண்டன் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பெரியபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி தலைமையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.இந்தச் சம்பவம் தொடர்பாக நேற்று மாலை ஆவாஜிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கௌரிசங்கரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.பின்னர்,அவர் மீது வழக்கு பதிவு செய்து ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்து திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×