search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி.
    X
    ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி.

    விவேகானந்தருக்கு மணிமண்டபம் கட்டக்கோரி ஆர்ப்பாட்டம்

    கும்பகோணத்தில் விவேகானந்தருக்கு மணிமண்டபம் கட்டக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் அனுமன் சேனா மாநில பொதுச்செயலாளர் பாலா தலைமையில் நாளை (12-ந்தேதி) விவேகானந்தர் ஜெயந்தி அன்று டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளிக்கக்கோரியும், கும்பகோணத்தில் விவேகானந்தருக்கு மணிமண்டபம் அமைக்ககோரியும் தமிழக அரசை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் சிறுவர்கள் விவேகானந்தர் உருவ வேடமணிந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் 
    லதா வாயிலாக தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

    Next Story
    ×