search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகி செல்லும் குடிநீர்.
    X
    குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகி செல்லும் குடிநீர்.

    பெரியகுளத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

    பெரியகுளத்தில் குழாய் உடைந்ததால் குடிநீர் வீணாக செல்கிறது
    பெரியகுளம்:

    பெரியகுளம் நகராட்சி பகுதியிலிருந்து எண்டபுளி பகுதிக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. நகரின் பிரதான பாலமான தண்டுபாளையம் பாலத்தின் அருகே செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து எண்டபுளி ஊராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை குடிநீர் குழாய் சீரமைக்கப்படவில்லை.

    நகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதால் குடிநீர் வீணாகி வராகநதி ஆற்றில் கலக்கிறது. குடிநீருக்காக பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் பல மாதங்களாக வீணாகும் குடிநீரை கண்டு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர். இதற்கு தீர்வு காண வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
    Next Story
    ×