என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வங்கியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
Byமாலை மலர்10 Jan 2022 9:37 AM GMT (Updated: 10 Jan 2022 9:37 AM GMT)
சேலத்தில் வங்கியை முற்றுகையிட்டு பொதுமக்கள் பேராட்டம் நடத்தினர்.
மகுடஞ்சாவடி:
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ள கன்னந்தேரியில் இந்தியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இக்கிளையை வருகிற 25&ந்தேதி முதல் 4 கிலோ மீட்டருக்கு தொலைவிலுள்ள கொங்கணாபுரம் கிளையுடன் இணைக்கப் போவதாக வங்கி நிர்வாகம் அறிவித்ததாக தெரிகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 300 -க்கும் மேற்பட்டோர் வங்கி முன்பு இன்று காலை திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டம் குறித்து பொதுமக்கள் கூறுகையில் வங்கியை இங்கிருந்து இடமாற்றம் செய்ய அனுமதிக்க மாட்டோம். அதையும் மீறி இடமாற்றம் செய்தால் வங்கி முன்பு ஆயிரக்கணக்கில் திரண்டு சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றனர். அதன் பிறகு கன்னந்தேரி ஊராட்சி மன்ற தலைவர் ராஜாமணி தலைமையில் வங்கி மேலாளர் விஜயராகவனிடம் மனு கொடுத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X