என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வத்தலக்குண்டுவில் கட்சி அலுவலகத்தை சூறையாடி வாலிபருக்கு அரிவாள் வெட்டு
Byமாலை மலர்9 Jan 2022 8:30 AM GMT (Updated: 9 Jan 2022 8:30 AM GMT)
வத்தலக்குண்டுவில் கட்சி அலுவலகத்தில் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கி வாலிபரை வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.
வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு-மதுரை மெயின் ரோட்டில் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் செல்வத்தின் அலுவலகம் உள்ளது. இங்கு கோட்டைபட்டியைச் சேர்ந்த மணிகண்டன் மகன் ராமகிருஷ்ணன் (வயது 22) ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று இரவு இந்த அலுவலகத்திற்குள் காசுக்கார தெற்குத்தெருவை சேர்ந்த ராஜா மகன் பாலா (36) என்பவர் அரிவாளுடன் உள்ளே புகுந்தார். அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார். இதை தடுக்க வந்த ராமகிருஷ்ணனையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினார். படுகாயமடைந்த ராமகிருஷ்ணன் இதுகுறித்து கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ராமகிருஷ்ணனை மீட்டு வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேலும் வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் சேக்தாவுது வழக்குப்பதிவு செய்து அரிவாளால் வெட்டிய பாலாவை கைது செய்து பழனி சிறையில் அடைத்தனர். முன்விரோதம் காரணமாக இந்த அரிவாள் வெட்டு சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X