என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வடமாநில தொழிலாளர்களுக்கு முககவசம் வழங்கிய போலீசார்
Byமாலை மலர்9 Jan 2022 8:20 AM GMT (Updated: 9 Jan 2022 8:20 AM GMT)
திருப்பூர் ரெயில் நிலையம் பகுதியில் வடக்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருப்பூர்:
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரவு நேர மற்றும் இன்று ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்று தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கையாக முககவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், சானிடைசர் பயன்பாடு உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து பகுதியிலும் போலீசார், சுகாதார துறையினர் கண்காணித்து வருகின்றனர். கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்தநிலையில் திருப்பூர் ரெயில் நிலையம் பகுதியில் வடக்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கண்காணிப்பின் போது வட மாநிலத்திலிருந்து ரெயில் மூலம் திருப்பூர் வந்திறங்கிய பலரும் முககவசம் இன்றி வந்தது தெரிந்தது.
இதையடுத்து கண்காணிப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களுக்கு முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, முககவசம் இன்றி பிடிபட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்து அனுப்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X