என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த ஆசிரியர் பலி
Byமாலை மலர்8 Jan 2022 9:51 AM GMT (Updated: 8 Jan 2022 9:51 AM GMT)
தஞ்சை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பள்ளி ஆசிரியர் பலியானார்.
வல்லம்:
தஞ்சை அருகே உள்ள தமிழ்ப்பல்கலை கழக வளாகம் சிந்தாமணி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் தாயுமானவன் (வயது 36).
இவருடைய மனைவி பெயர் தேன்மொழி (26). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தாயுமானவன் தஞ்சை அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர்.
இந்நிலையில் தாயுமானவன், தேன்மொழியுடன் மோட்டார் சைக்கிளில் வலங்கைமானுக்கு சென்று விட்டு திருவையாறு-பிள்ளையார்பட்டி பைபாஸ் சாலையில் வந்தபோது.
8-ம் நம்பர் கரம்பை அருகே மோட்டார் சைக்கிள் டயர் சறுக்கியதில் நிலைதடுமாறி. இருவரும் கீழே விழுந்தனர்.
இதில் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தாயுமானவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேன்மொழி சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X