என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - முதியவர் கைது
Byமாலை மலர்8 Jan 2022 9:51 AM GMT (Updated: 8 Jan 2022 9:51 AM GMT)
மகள் அழுவதை பார்த்த பெற்றோர் நடந்த விவரத்தை கேட்டனர்.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 3-ம்வகுப்பு படித்து வந்தாள். சம்பவத்தன்று வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்தபோது அந்த பகுதியை சேர்ந்த 65 வயதான முதியவர் வெள்ளைச்சாமி என்பவர் சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து வீட்டிற்கு அழைத்து சென்றார்.
அங்கு சென்றதும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்றார். மகள் அழுவதை பார்த்த பெற்றோர் நடந்த விவரத்தை கேட்டனர். அப்போது வெள்ளைச்சாமி பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
உடனே இதுகுறித்து காங்கேயம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வெள்ளைச்சாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியையும் வீட்டிற்கு அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. சிறுமிகளுக்கு முதியவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X