search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அஜய் குமார்
    X
    அஜய் குமார்

    போக்சோ வழக்கில் வாலிபர் கைது

    திண்டுக்கல் அருகே சிறுமியை திருமணம் செய்து கடத்திய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்
    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கோபால்பட்டியை அடுத்த எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மனோகர். அவரது மகன் அஜய் குமார் (வயது 21). கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 28ந் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய 9ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார்.

    இது குறித்து மாணவியின் தந்தை சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ஏ.எஸ்.பி. அருண் கபிலன் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி தலைமையில், சப்&இன்ஸ்பெக்டர் கணேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன், காவலர் பாக்யராஜ் ஆகியோர் மாணவியை கடத்திச் சென்ற வாலிபரை குஜராத், கோவை, குன்னூர், ஊட்டி ஆகிய பகுதிகளில் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் திண்டுக்கல் மலைக்கோட்டை அருகே மாணவியுடன் பதுங்கி இருந்த வாலிபர் அஜய்குமாரை போலீசார் பிடித்தனர்.

    அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் சாணார்பட்டி போலீசார் கைது செய்தனர். கடந்த 4 மாதங்களாக போலீசாருக்கு போக்குக் காட்டிய வாலிபரை கைது செய்த சாணார்பட்டி போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பாராட்டினார்.
    Next Story
    ×