என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தாட்கோ மூலம் நிலம் வாங்க மகளிருக்கு மானியத்துடன் கடன்
Byமாலை மலர்7 Jan 2022 1:08 PM GMT (Updated: 7 Jan 2022 1:08 PM GMT)
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாதவரிடமிருந்து நிலம் வாங்க வேண்டும்.
திருப்பூர்:
தாட்கோ மூலம் நிலம் வாங்க மகளிருக்கு கடன் வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தப்படுத்தி வருகிறது. அதில் நிலம் வாங்குவதற்கும், நிலத்தை மேம்படுத்துவதற்கும் வங்கியுடன் இணைந்து மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் கடன் பெற விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மகளிராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமலும், 18 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் அதிகபட்சமாக நன்செய் 2.50 ஏக்கர் அல்லது 5 ஏக்கர் புன்செய் நிலம் வாங்கலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாதவரிடமிருந்து நிலம் வாங்க வேண்டும்.
இத்திட்டத்தில் பத்திரப் பதிவு கட்டணத்தை அரசு தள்ளுபடி செய்துள்ளது. நிலம் வாங்கும் மொத்த முதலீட்டில் 30 சதவீதம் அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் மானியமாகவும், மீதித் தொகை வங்கிக் கடன் மூலமாகவும் வழங்கப்படும்.
நில மேம்பாட்டுத் திட்டத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு நில வளத்தை மேம்படுத்துதல், ஆழ்துளைக் கிணறு அல்லது திறந்த வெளிக்கிணறு அமைத்தல், பம்ப்செட் கொட்டகை அமைத்தல் போன்றவற்றுக்காகவும் 30 சதவீதம் மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கப்படும்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2971112 என்ற எண்ணிலோ அல்லது உரிய ஆவணங்களுடன் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X