என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாதயாத்திரை பக்தர்களுக்கும் இரவு நேர ஊரடங்கு பொருந்தும்-துணை போலீஸ் கமிஷனர் பேட்டி
Byமாலை மலர்6 Jan 2022 10:29 AM GMT (Updated: 6 Jan 2022 10:29 AM GMT)
பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கும் இரவு நேர ஊரடங்கு பொருந்தும் என நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார் கூறினார்.
நெல்லை:
நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாநகர பகுதிகளில் 3-வது அலையை எதிர்கொள்ள தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தப்படும். மாநகர பகுதியில் 10 மணிக்கு மேல் பேரிகார்டுகள் கொண்டு சாலைகள் அடைக்கப்படும். எனவே பொதுமக்கள் இரவு நேர கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.
மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்லும் பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள கடைகளிலேயே வாங்கிக்கொள்ள வேண்டும். இதற்காக வெகு தூரம் செல்லக்கூடாது.
அதிகளவு தொற்றை தடுக்க பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தடுக்க வேண்டும். பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் இரவு 10 மணிக்குள் குறிப்பிட்ட இலக்கை அடையும் வகையில் செல்ல வேண்டும். இந்த ஊரடங்கு அவர்களுக்கும் பொருந்தும்.
மாநகர பகுதிகளில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X