search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    கதவை உடைத்து 9 பவுன் நகை திருட்டு

    தஞ்சையில் டிரைவர் வீட்டின் கதவை உடைத்து 9 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு போனது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் ராஜீவ்நகரை சேர்ந்தவர் கமலகண்ணன் (வயது 35) கார் டிரைவர். இவரது மனைவி வித்யா (30). 

    சம்பவத்தன்று இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றனர். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 

    பதறியடித்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 
    9 பவுன் தங்க நகை, 700 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து வித்யா தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். 

    கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகியிருந்த ரேகைகளை சேகரித்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 
    மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×