என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மளிகை கடையில் திருடியவர் கைது
Byமாலை மலர்5 Jan 2022 9:43 AM GMT (Updated: 5 Jan 2022 9:43 AM GMT)
சேர்மராஜ் மளிகை கடையில் பொருட்களை திருடி மூட்டையாக கட்டி கொண்டு சென்றது தெரியவந்தது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் நாச்சிபாளையத்த்தில் மளிகை கடை நடத்தி வருபவர் சேர்மராஜ் (வயது 40). நேற்று நள்ளிரவில் இவரது மளிகைக் கடைக்குள் புகுந்த நபர், அங்கிருந்த மளிகை பொருட்களை திருடி மூட்டையாக கட்டிக்கொண்டு நாச்சிபாளையம் பஸ் நிறுத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார் .
அப்போது அந்த வழியாக வந்த அவிநாசிபாளையம் போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை செய்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து அவரை அவிநாசிபாளையம் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை செய்தனர்.
அப்போது அவர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உடையார்பாளையத்தை சேர்ந்த செல்வம் (40) என்பதும் சேர்மராஜ் மளிகை கடையில் பொருட்களை திருடி மூட்டையாக கட்டி கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து மளிகைப் பொருட்களை மீட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X