என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க கோரி பொங்கல் பானையை உடைத்து ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்3 Jan 2022 10:13 AM GMT (Updated: 3 Jan 2022 10:13 AM GMT)
இந்து தேசிய கட்சியினர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக பொங்கல் பானையை தலையில் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அப்போதைய அ.தி.மு.க. அரசு 2500 ரூபாய் பொங்கல் பரிசு பணம் வழங்கியது.
அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றார் எனவே தற்போதைய தி.மு.க. அரசு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு பணம் ரூ.5ஆயிரம் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்து தேசிய கட்சியினர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக பொங்கல் பானையை தலையில் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தமிழக அரசு உடனடியாக பொங்கல் பரிசு பணத்தை வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி பொங்கல் பானையை கீழே போட்டு உடைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X