search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொங்கல் பானையை உடைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி.
    X
    பொங்கல் பானையை உடைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி.

    பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க கோரி பொங்கல் பானையை உடைத்து ஆர்ப்பாட்டம்

    இந்து தேசிய கட்சியினர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக பொங்கல் பானையை தலையில் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருப்பூர்:

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அப்போதைய அ.தி.மு.க. அரசு 2500 ரூபாய் பொங்கல் பரிசு பணம் வழங்கியது. 

    அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றார் எனவே தற்போதைய தி.மு.க. அரசு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு பணம் ரூ.5ஆயிரம் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்து தேசிய கட்சியினர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக பொங்கல் பானையை தலையில் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    மேலும் தமிழக அரசு உடனடியாக பொங்கல் பரிசு பணத்தை வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி பொங்கல் பானையை கீழே போட்டு உடைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    Next Story
    ×