search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 31 பேர் கைது

    தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 31 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 16 பேரும், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 10 பேரும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரும், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 210 புகையிலைப் பாக்கெட்டுகள், 84 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    அதன்படி மாவட்டத்தில் புகையிலைப் பொருட்கள், மதுபாட்டில்கள் விற்பனை மற்றும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மொத்தம் 29 வழக்குகள் பதிவு செய்து 31 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×