search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நூல் விலைக்கு கூடுதல் கமிஷன் - வியாபாரிகள் வலியுறுத்தல்

    நூல் விலை உயர்வுக்கு ஏற்ப கமிஷன் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் நூல் வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் எம்.கே.எம்., ரிச் ஓட்டலில் நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார்.செயலாளர் முருகேஷ், துணை தலைவர் உமாபதி முன்னிலை வகித்தனர்.

    சங்கத்தில் நிர்வாகக்குழுவின் பதவிக்காலம் நிறைவு பெறுவதால் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன் நூல் விலை கிலோ ரூ. 90 ஆக இருந்தது. தற்போது ரூ. 300 ஆக உயர்ந்துள்ளது. 

    இருப்பினும் அதே அளவு கமிஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. நூல் விலை உயர்வுக்கு ஏற்ப கமிஷன் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    Next Story
    ×