search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    குடும்ப தகராறில் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை

    நேற்று முன்தினம் இரவு செந்தில்குமார் மீண்டும் குடித்துவிட்டு வரவே கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது.
    பல்லடம்:

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது   மனைவி பொன்மணி(29). இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், 1 1/2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்தநிலையில் சாய தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வந்த செந்தில்குமார் சமீபகாலமாக குடிப்பழக்கத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் குடிப்பழக்கம் காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பொன்மணி திருவண்ணாமலையில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் பெற்றோர்கள் சமாதானம் பேசி கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் இணைந்தனர்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு செந்தில்குமார் மீண்டும் குடித்துவிட்டு வரவே கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது .இதில் மனம் வருந்திய பொன்மணி கணவர் மற்றும் குழந்தைகள் தூங்கியபின் அதிகாலையில் வீட்டின் கூரையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தூங்கி எழுந்த செந்தில்குமார் மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து இந்த தற்கொலை குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமணமாகி 6 வருடமே ஆனதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×