search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பொங்கலூர் பகுதியில் நாளை மின்தடை

    தெற்கு அவிநாசிபாளையம், உகாயனூர், என்.என்.புதூர், வடக்கு அவிநாசிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
    பல்லடம்:

    பொங்கலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின்சார விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளர் கோபால் தெரிவித்துள்ளார்.

    மின்விநியோகம் தடைபடும் பகுதிகளானது பொங்கலூர், காட்டூர், தொட்டம்பட்டி, மாதப்பூர், கெங்கநாயக்கன்பாளையம், பெத்தாம்பாளையம், பொல்லிகாளிபாளையம், கண்டியன்கோயில், தெற்கு அவிநாசிபாளையம், உகாயனூர், என்.என்.புதூர், வடக்கு அவிநாசிபாளையம் ஆகிய பகுதிகள் ஆகும்.
    Next Story
    ×