search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    விபத்தில் சிக்கிய மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்க தொடர் சிகிச்சை - தொ.மு.ச.,வலியுறுத்தல்

    பணியின் போது பல்வேறு விபத்துக்களால் பாதிக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
    திருப்பூர்:

    திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் புதிய மேற்பார்வை பொறியாளராக ஸ்டாலின் பாபு பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் மின் வாரிய தொ.மு.ச., நிர்வாகிகள், மேற்பார்வை பொறியாளரை சந்தித்து மனு கொடுத்தனர். 

    அதில் ஒப்பந்த தொழிலாளர் பிரிவு அலுவலகங்களில் தொந்தரவின்றி பணியாற்ற வழிவகை செய்ய வேண்டும். பணியின்போது பல்வேறு விபத்துக்களால் பாதிக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். விபத்துக்கு காரணமான நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தனர்.
    Next Story
    ×