search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    மகளுக்கு பாலியல் தொல்லை- லாரி டிரைவர் போக்சோவில் கைது

    கோவையில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
    கவுண்டம்பாளையம்:

    கோவையை சேர்ந்தவர் 36 வயது வாலிபர். லாரி டிரைவரான இவருக்கு திருமணமாகி மனைவி, 10 வயதில் மகள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே நேற்று திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனைவி கோபித்து கொண்டு அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.

    வீட்டில் லாரி டிரைவரும், அவரது மகளும் மட்டுமே இருந்தனர். அப்போது லாரி டிரைவர் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்தார். அவர் அன்னூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் லாரி டிரைவர் மீது போக்சோவில் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.
    Next Story
    ×