என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மதுரை அருகே இளம்பெண் உள்பட 2 பேரிடம் செல்போன் பறிப்பு
Byமாலை மலர்22 Dec 2021 10:00 PM GMT (Updated: 22 Dec 2021 10:00 PM GMT)
மதுரை அருகே இளம்பெண் உள்பட 2 பேரிடம் செல்போன் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகரை சேர்ந்தவர் மாலதி (வயது 19). சம்பவத்தன்று இவர் வில்லாபுரம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் மாலதி வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி விட்டார். இது குறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை தெப்பக்குளம் மீனாட்சி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (25). இவர் வில்லாபுரம் பகுதியில் சென்ற போது ஒருவர் அவரது செல்போனை பேசி விட்டு தருவதாக கேட்டுள்ளார். பின்னர் அந்த நபர் செல்போனை வாங்கி கொண்டு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அவரை பாலமுருகன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிடித்து அவனியாபுரம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த அபுபக்கர் (51) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X