search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மதுரை அருகே இளம்பெண் உள்பட 2 பேரிடம் செல்போன் பறிப்பு

    மதுரை அருகே இளம்பெண் உள்பட 2 பேரிடம் செல்போன் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகரை சேர்ந்தவர் மாலதி (வயது 19). சம்பவத்தன்று இவர் வில்லாபுரம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் மாலதி வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி விட்டார். இது குறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை தெப்பக்குளம் மீனாட்சி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (25). இவர் வில்லாபுரம் பகுதியில் சென்ற போது ஒருவர் அவரது செல்போனை பேசி விட்டு தருவதாக கேட்டுள்ளார். பின்னர் அந்த நபர் செல்போனை வாங்கி கொண்டு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அவரை பாலமுருகன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிடித்து அவனியாபுரம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த அபுபக்கர் (51) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
    Next Story
    ×