search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசார் விசாரணை
    X
    போலீசார் விசாரணை

    வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.41 லட்சம் மோசடி- 5 பேரிடம் விசாரணை

    மதுரையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.41 லட்சம் மோசடி செய்த 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை அண்ணாநகர் மவுலானா தெருவை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 42). இவர் அந்த பகுதியில் டிராவல்ஸ் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவரிடம் கரூர் மினி பஸ் நிலைய பகுதியைச் சேர்ந்த காட்வின் (33), சுரேஷ்குமார் (28), சகோதரர்கள் ராகுல் (30), ரஜினிஷ் (25) ஆகியோர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளனர்.

    இதனை நம்பி சுப்புராஜ் அவர்களிடம் ரூ.41 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்டவர்கள் வாக்குறுதி கொடுத்தபடி வேலை வாங்கி தரவில்லை.

    எனவே சுப்புராஜ் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் தர மறுத்து விட்டனர். இதுதொடர்பாக சுப்புராஜ் அண்ணாநகர் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். மேலும் கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்தார்.

    அதன் அடிப்படையில் அண்ணாநகர் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து காட்வின் மற்றும் சகோதரர்கள் சுரேஷ்குமார் ராகுல், ரஜினிஷ் ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×