என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.41 லட்சம் மோசடி- 5 பேரிடம் விசாரணை
Byமாலை மலர்21 Dec 2021 10:08 AM GMT (Updated: 21 Dec 2021 10:08 AM GMT)
மதுரையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.41 லட்சம் மோசடி செய்த 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை அண்ணாநகர் மவுலானா தெருவை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 42). இவர் அந்த பகுதியில் டிராவல்ஸ் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரிடம் கரூர் மினி பஸ் நிலைய பகுதியைச் சேர்ந்த காட்வின் (33), சுரேஷ்குமார் (28), சகோதரர்கள் ராகுல் (30), ரஜினிஷ் (25) ஆகியோர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளனர்.
இதனை நம்பி சுப்புராஜ் அவர்களிடம் ரூ.41 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்டவர்கள் வாக்குறுதி கொடுத்தபடி வேலை வாங்கி தரவில்லை.
எனவே சுப்புராஜ் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் தர மறுத்து விட்டனர். இதுதொடர்பாக சுப்புராஜ் அண்ணாநகர் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். மேலும் கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்தார்.
அதன் அடிப்படையில் அண்ணாநகர் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து காட்வின் மற்றும் சகோதரர்கள் சுரேஷ்குமார் ராகுல், ரஜினிஷ் ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை அண்ணாநகர் மவுலானா தெருவை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 42). இவர் அந்த பகுதியில் டிராவல்ஸ் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரிடம் கரூர் மினி பஸ் நிலைய பகுதியைச் சேர்ந்த காட்வின் (33), சுரேஷ்குமார் (28), சகோதரர்கள் ராகுல் (30), ரஜினிஷ் (25) ஆகியோர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளனர்.
இதனை நம்பி சுப்புராஜ் அவர்களிடம் ரூ.41 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்டவர்கள் வாக்குறுதி கொடுத்தபடி வேலை வாங்கி தரவில்லை.
எனவே சுப்புராஜ் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் தர மறுத்து விட்டனர். இதுதொடர்பாக சுப்புராஜ் அண்ணாநகர் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். மேலும் கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்தார்.
அதன் அடிப்படையில் அண்ணாநகர் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து காட்வின் மற்றும் சகோதரர்கள் சுரேஷ்குமார் ராகுல், ரஜினிஷ் ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X