search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பலி
    X
    பலி

    வலங்கைமான் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

    வலங்கைமான் அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் உத்தமதானபுரம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
    வலங்கைமான்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள உத்தமதானபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் சிவசாமி. இவருடைய மனைவி மலர்க்கொடி( வயது55). நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல வீட்டில் மின் விளக்கை எரிய வைக்க சுவிட்சை இயக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மலர்க்கொடி தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மலர்க்கொடி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வலங்கைமான் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மலர்க்கொடி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் உத்தமதானபுரம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
    Next Story
    ×