search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூரில் விளையாட்டு மைதான பணிகள் தீவிரம்

    அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் கேலரி பணி தொடங்கும் என விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ. 8.72 கோடி மதிப்பில் விரிவான விளையாட்டு மைதானம், தடகள ஓடுதளம் கட்டும் பணி கடந்த செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கியது. 

    இரண்டு மாதங்களில் சுற்றுச்சுவர் கட்டி முடிக்கப்பட்டு ஏற்ற, இறக்கமாக உள்ள நிலத்தை சமப்படுத்தும் பணி பொக்லைன் மூலம் நடந்து வருகிறது. 

    சர்வதேச தரத்திலான ‘சிந்தடிக்‘ ஓடுதளம் அமைக்க தேவையான உபகரணங்கள் இம்மாத இறுதிக்குள் வர உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் கேலரி பணி தொடங்கும் என விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×