என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மதுரையில் வீடு எடுத்து விபசாரம் நடத்திய புரோக்கர்கள் கைது
Byமாலை மலர்17 Dec 2021 9:56 AM GMT (Updated: 17 Dec 2021 9:56 AM GMT)
மதுரையில் வீடு எடுத்து விபசாரம் நடத்திய 2 புரோக்கர்களை கைது செய்த போலீசார் தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.
மதுரை:
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் விபசாரம் நடப்பதாக மாநகர போலீசுக்கு தகவல் வந்தது. இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாநகர வடக்கு போலீஸ் துணை கமிஷனர் ராஜசேகர் உத்தரவிட்டார்.
அதன்படி அண்ணாநகர் போலீஸ் உதவி கமிஷனர் சூரக்குமரன் மேற்பார்வையில், புதூர் இன்ஸ்பெக்டர் துரை பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மாட்டுத்தாவணி பத்திரிகையாளர் குடியிருப்பு பகுதியில் விபசாரம் நடப்பதாக தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர்.
அங்கு பதுங்கியிருந்த 3 பெண்கள் உள்பட 5 பேர் பிடிபட்டனர். விசாரணையில் அவர்கள் திருவனந்தபுரம் சாலமன் (30), சென்னை நம்மாழ்வார் பேட்டை ஹரிகிருஷ்ணன் (26) என்பது தெரியவந்தது.
மதுரையைச் சேர்ந்த புகழ்வேந்தன் என்பவர் மாட்டுத்தாவணியில் வீடு எடுத்து சென்னை, கோவை, ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து 3 பெண்களை வரவழைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார். அவருக்கு சாலமன், ஹரி கிருஷ்ணன் ஆகிய 2 பேரும் புரோக்கர்களாக இருந்து செயல்பட்டது தெரிந்தது.
இதையடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட சாலமன், ஹரி கிருஷ்ணன் ஆகியோரை கீரைத்துறை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய புகழ்வேந்தனை தேடி வருகின்றனர்.
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் விபசாரம் நடப்பதாக மாநகர போலீசுக்கு தகவல் வந்தது. இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாநகர வடக்கு போலீஸ் துணை கமிஷனர் ராஜசேகர் உத்தரவிட்டார்.
அதன்படி அண்ணாநகர் போலீஸ் உதவி கமிஷனர் சூரக்குமரன் மேற்பார்வையில், புதூர் இன்ஸ்பெக்டர் துரை பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மாட்டுத்தாவணி பத்திரிகையாளர் குடியிருப்பு பகுதியில் விபசாரம் நடப்பதாக தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர்.
அங்கு பதுங்கியிருந்த 3 பெண்கள் உள்பட 5 பேர் பிடிபட்டனர். விசாரணையில் அவர்கள் திருவனந்தபுரம் சாலமன் (30), சென்னை நம்மாழ்வார் பேட்டை ஹரிகிருஷ்ணன் (26) என்பது தெரியவந்தது.
மதுரையைச் சேர்ந்த புகழ்வேந்தன் என்பவர் மாட்டுத்தாவணியில் வீடு எடுத்து சென்னை, கோவை, ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து 3 பெண்களை வரவழைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார். அவருக்கு சாலமன், ஹரி கிருஷ்ணன் ஆகிய 2 பேரும் புரோக்கர்களாக இருந்து செயல்பட்டது தெரிந்தது.
இதையடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட சாலமன், ஹரி கிருஷ்ணன் ஆகியோரை கீரைத்துறை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய புகழ்வேந்தனை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X