search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெட்ரோல் பங்கை சூறையாடிய கும்பல் சி.சி.டி.வி.காமிராவில் பதிவாகியிருப்பதை படத்தில் காணலாம்.
    X
    பெட்ரோல் பங்கை சூறையாடிய கும்பல் சி.சி.டி.வி.காமிராவில் பதிவாகியிருப்பதை படத்தில் காணலாம்.

    பட்டாக்கத்தியுடன் புகுந்து பல்லடம் பெட்ரோல் பங்கை சூறையாடிய கும்பல்

    பல்லடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் தேசிய நெடுஞ்சாலை மாணிக்காபுரம் பிரிவு சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. சம்பவத்தன்று இரவு மர்மநபர்கள் அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தனர். அவர்கள் பெட்ரோல் பங்கை சூறையாடி ஒருவரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர். 

    நள்ளிரவில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பல்லடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கு கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய காட்சிகளை ஆய்வு செய்தனர். 

    அதில் 4 பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் பட்டாக்கத்தியுடன் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். 
    Next Story
    ×