search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    மீஞ்சூர் அருகே வழிப்பறியில் ஈடுபட முயன்ற 2 பேர் கைது

    மீஞ்சூர் அருகே வழிப்பறியில் ஈடுபட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மீஞ்சூர்:

    மீஞ்சூர் அடுத்த நாலூர் சுடுகாடு அருகே மர்ம நபர்கள் 2 பேர் பதுங்கி இருப்பதாக மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் புதுப்பேடு பகுதியை சேர்ந்த சந்தோஷ் (வயது 25), நாலூரை சேர்ந்த அஜித் (25) என்பது தெரியவந்தது. சாலையில் செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட இருப்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த கத்தியையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×