search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கேலோ இந்தியா போட்டி - திருப்பூரில் 2 பேர் தேர்வு

    நடப்பாண்டுக்கான பட்டியலில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சன்மத்தர்ஷன், பவீனா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
    திருப்பூர்:

    அத்லெட்டிக் பெடரேஷன் ஆப் இந்தியா, இந்திய தடகள சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் சிறந்த விளங்கும் 12 வீரர், வீராங்கனைகள் பட்டியல் வெளியிடுகிறது. இப்பட்டியலில் இடம் பெறும் வீரர்கள் ‘கேலோ இந்தியா’ தடகள போட்டியில் பங்கேற்பர்.

    நடப்பாண்டுக்கான பட்டியலில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சன்மத்தர்ஷன், பவீனா ஆகியோர் தேர்வாகியுள்ளனர். சன்மத்தர்ஷன் எஸ்.பி.ஜே., கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 

    பவீனா திருப்பூர் செயின்ட் ஜோசப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார். இருவரும் தடகளம், நீளம் தாண்டுதலில் தேசிய போட்டியில் தொடர் வெற்றி பெற்றதால் கேலோ இந்தியா போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
    Next Story
    ×