என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாளை அருகே வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
Byமாலை மலர்7 Dec 2021 9:58 AM GMT (Updated: 7 Dec 2021 9:58 AM GMT)
பாளை அருகே வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:
பாளை அருகே உள்ள டக்கரம்மாள்புரத்தை அடுத்த ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அங்கப்ப பாண்டியன் (வயது 33). இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார்.
நேற்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உடைந்து கிடந்தது. உள்ளே சென்றபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 7 பவுன் எடையுள்ள தங்க செயின் மற்றும் மோதிரங்கள், ரொக்கப் பணம் ரூ 1 லட்சத்து 26 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ 3 லட்சம் ஆகும்.
இது குறித்து அங்கப்ப பாண்டியன் பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று கைரேகைகளை ஆய்வு செய்தனர். தடயங்களையும் சேகரித்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தப்பி ஓடிய கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
பாளை அருகே உள்ள டக்கரம்மாள்புரத்தை அடுத்த ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அங்கப்ப பாண்டியன் (வயது 33). இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார்.
நேற்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உடைந்து கிடந்தது. உள்ளே சென்றபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 7 பவுன் எடையுள்ள தங்க செயின் மற்றும் மோதிரங்கள், ரொக்கப் பணம் ரூ 1 லட்சத்து 26 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ 3 லட்சம் ஆகும்.
இது குறித்து அங்கப்ப பாண்டியன் பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று கைரேகைகளை ஆய்வு செய்தனர். தடயங்களையும் சேகரித்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தப்பி ஓடிய கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X