search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம்
    X
    விஷம்

    சோழவரம் அருகே வேலை கிடைக்காததால் வாலிபர் தற்கொலை

    சோழவரம் அருகே வேலை கிடைக்காததால் மனவேதனை அடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    பொன்னேரி:

    சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் ஆத்திபேடு காலனியைச் சேர்ந்தவர் பிரவீன் (வயது28).

    இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கால் வேலை இழந்த அவர் கடந்த 9 மாதமாக வேறு வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்தார். இதனால் மன உளைச்சல் அடைந்த பிரவீன் வி‌ஷம் குடித்து மயங்கினார்.

    அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
     
    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பிரவீன் இறந்தார். இதுகுறித்து சோழவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×