search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.
    X
    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.

    திருப்பூரில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திருப்பூர்:

    பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முஸ்லிம் அமைப்பினர் ஆரப்பாட்டம் நடத்தினர். 

    திருப்பூர் ரெயில் நிலையம் அருகே எஸ்.டி.பி.ஐ. அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.அவர்கள் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிராக கோஷங்களை  எழுப்பினர்.  

    இதையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதேப்போல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
    Next Story
    ×