search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளம் போல் தேங்கி கிடக்கும் மழைநீர்.
    X
    குளம் போல் தேங்கி கிடக்கும் மழைநீர்.

    உடுமலை அரசு பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கி கிடக்கும் மழைநீர்

    மழையின் காரணமாக வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளது.
    உடுமலை:

    உடுமலை ராஜேந்திர ரோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கேந்திரிய வித்யாலயா பள்ளி, மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் அமைந்துள்ளது. இவை ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால்சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளது.

    மாணவர்கள் தண்ணீரில் நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே நகராட்சி மூலம்  தண்ணீரை வெளியேற்றி மாணவர்கள் வகுப்பறைக்கு செல்ல உதவ வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×