என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்5 Dec 2021 4:12 AM GMT (Updated: 5 Dec 2021 4:12 AM GMT)
மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் சோலை (வயது 60). இவர் திண்டுக்கல் பைபாஸ் ரோடு பகுதியில் நடந்து சென்ற போது வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்தார். பின்னர் அவர் சோலையை கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து 300 ரூபாயை பறித்து கொண்டு தப்பி ஓடினார். அவரது சத்தம் கேட்டு அந்த வழியாக வந்தவர்கள் அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். செல்லூர் போலீசார் விசாரணை நடத்தியதில் சென்னை தி.நகரை சேர்ந்த கார்த்திக் (26) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மதுரை கீரைத்துறை பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (70). சம்பவத்தன்று இவர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அய்யனார் (33) என்பவர் கத்தியை காட்டி அவரிடமிருந்து பணத்தை பறித்தார். இது குறித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தெற்குவாசல் போலீசார் அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது போலீசார் கத்தியை காட்டி பணம் பறித்து சென்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் மீனாட்சி பள்ளம், காஜா தெருவை சேர்ந்த சூர்யா (26) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X