என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வாடிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
Byமாலை மலர்5 Dec 2021 3:45 AM GMT (Updated: 5 Dec 2021 3:45 AM GMT)
வாடிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாடிப்பட்டி:
வாடிப்பட்டி அருகே கெங்கமுத்தூரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 35) விவசாயி. இவருடைய மனைவி பழனியம்மாள் (28). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் பாலமேட்டிற்கு சென்றனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்த போது கெங்கமுத்தூர் பஸ்நிறுத்தம் அருகே நாய் ஒன்று குறுக்கே பாய்ந்தது. இதனால் கண்ணன் திடீரென்று பிரேக் பிடித்ததால் பழனியம்மாள் கீழே நிலை தடுமாறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார். இது சம்பந்தமாக கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குபதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X