search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    திறந்தே இருக்கும் சென்னை ஐகோர்ட் கதவுகள் 24 மணி நேரம் மூடல் - இதுதான் காரணம்

    சென்னை ஐகோர்ட்டின் அனைத்து கதவுகளும் இன்று இரவு 8 மணி வரை மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட் 150 ஆண்டு பாரம்பரியம் மிக்கது. தினமும் ஏராளமான வழக்கறிஞர்கள், பொதுமக்கள் வந்து செல்லும் இந்த வளாகம், சென்னையின் பரபரப்பான இடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ஐகோர்ட் வளாகத்தின் கதவுகள் அனைத்தும் ஆண்டுக்கொரு முறை ஒரு நாள் முழுவதுமாக அடைக்கப்படுவது வழக்கம்.

    ஐகோர்ட் என்பது பொதுமக்களுக்கான பொது இடம் அல்ல. அரசு சொத்து என்பதை நினைவூட்டி, உறுதிசெய்யும் விதமாக ஆண்டுக்கு ஒருநாள் கதவுகள் அனைத்தும் மூடப்படுகிறது.
     
    இந்நிலையில், பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் இந்த சம்பிரதாயம் இந்த ஆண்டில் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி, நேற்று இரவு 8 மணியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி வரை ஒருநாள் முழுவதும் ஐகோர்ட்டின் அனைத்துக் கதவுகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×