என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
Byமாலை மலர்3 Dec 2021 10:06 AM GMT (Updated: 3 Dec 2021 10:06 AM GMT)
கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும் என்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் கிருஷ்ணாபுரம் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த பகுதிகளில் அரசின் சார்பில் அமைக்கப்படும், நியாய விலைக்கடை, பொதுக்கழிப்பிடம், ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடம், மயானம் போன்ற எந்த அடிப்படைகளும் இல்லாத நிலை உள்ளது.
200-க்கும் மேற்பட்ட குடுமங்கள் வசித்து வருவதால் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஏற்கனவே பலமுறை கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இந்தநிலையில் இன்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு தங்களது கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும் என்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டரை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X