என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை
Byமாலை மலர்3 Dec 2021 2:45 AM GMT (Updated: 3 Dec 2021 2:46 AM GMT)
சென்னை வேளச்சேரியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம், தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை:
சென்னை வேளச்சேரி புதிய தலைமைச்செயலக காலனி 2-வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 60). இவர், 1983-ம் ஆண்டு இந்திய வனப் பணிக்கு தேர்வாகி தமிழ்நாட்டில் வனத்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பதவி வகித்தார். 2018-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
ஓய்வுபெற்ற பிறகு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்டார்.
வெங்கடாசலம், தனது பதவியை பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த செப்டம்பர் மாதம் 24-ந் தேதி அவருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சுமார் 11 கிலோ தங்கம், 15 கிலோ சந்தன மரக்கட்டைகள் மற்றும் 6 கிலோ வெள்ளி பொருட்களும் இந்த சோதனையில் கண்டறியப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் வேளச்சேரியில் உள்ள தனது வீட்டில் இருந்த வெங்கடாசலம் நேற்று மதியம் மாடியில் உள்ள படுக்கை அறைக்கு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் கீழே இறங்கி வரவில்லை.
இதனால் அவருடைய மனைவி வசந்தி, மாடிக்கு சென்று பார்த்தபோது படுக்கை அறை கதவு உள்புறமாக பூட்டி இருந்தது. நீண்டநேரம் கதவை தட்டியும் வெங்கடாசலம் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் வேட்டியால் வெங்கடாசலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 2 மணிநேர விசாரணைக்கு பிறகு போலீசார் வெங்கடாசலம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கொடுக்கப்பட்ட மன அழுத்தம் காரணமாக வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் வேளச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வேளச்சேரி புதிய தலைமைச்செயலக காலனி 2-வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 60). இவர், 1983-ம் ஆண்டு இந்திய வனப் பணிக்கு தேர்வாகி தமிழ்நாட்டில் வனத்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பதவி வகித்தார். 2018-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
ஓய்வுபெற்ற பிறகு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்டார்.
வெங்கடாசலம், தனது பதவியை பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த செப்டம்பர் மாதம் 24-ந் தேதி அவருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சுமார் 11 கிலோ தங்கம், 15 கிலோ சந்தன மரக்கட்டைகள் மற்றும் 6 கிலோ வெள்ளி பொருட்களும் இந்த சோதனையில் கண்டறியப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் வேளச்சேரியில் உள்ள தனது வீட்டில் இருந்த வெங்கடாசலம் நேற்று மதியம் மாடியில் உள்ள படுக்கை அறைக்கு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் கீழே இறங்கி வரவில்லை.
இதனால் அவருடைய மனைவி வசந்தி, மாடிக்கு சென்று பார்த்தபோது படுக்கை அறை கதவு உள்புறமாக பூட்டி இருந்தது. நீண்டநேரம் கதவை தட்டியும் வெங்கடாசலம் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் வேட்டியால் வெங்கடாசலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 2 மணிநேர விசாரணைக்கு பிறகு போலீசார் வெங்கடாசலம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கொடுக்கப்பட்ட மன அழுத்தம் காரணமாக வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் வேளச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X