search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சப்-கலெக்டர் வீடு
    X
    சப்-கலெக்டர் வீடு

    திருச்சியில் பெண் சப்-கலெக்டர் வீடு, பள்ளி உள்பட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை

    சப்-கலெக்டர் பவானிக்கு சொந்தமான பெட்ரோல் பங்க், மண்ணச்சநல்லூரில் உள்ள பள்ளி மற்றும் தொழிற்சாலை ஆகிய 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
    திருச்சி:

    திருச்சி திருவானைக்காவல் நெல்சன் சாலை பகுதியை சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன். இவரது 2-வது மனைவி பவானி. இவர் தற்போது திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சப்-கலெக்டராக பணியாற்றி வருகிறார்.

    இவர் ஏற்கனவே திருச்சியில் ஸ்ரீரங்கம் தாசில்தாராகவும், வருவாய்த்துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் இன்று திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன், இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் குழுவினர் திருவானைக்காவல் நெல்சன் சாலையில் உள்ள பவானியின் சொகுசு பங்களாவில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இவர் முறைகேடாக லஞ்சம் வாங்கி அதன் மூலம் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்பட்டது.

    நெல்சன் சாலை பங்களாவை தொடர்ந்து திருச்சியை அடுத்த வாளாடியில் உள்ள சப்-கலெக்டர் பவானிக்கு சொந்தமான பெட்ரோல் பங்க், மண்ணச்சநல்லூரில் உள்ள மெட்ரிக் பள்ளி மற்றும் டால்மியாபுரத்தில் உள்ள அலுமினிய தொழிற்சாலை ஆகிய 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இதில் கணக்கில் வராத நகை, பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக முதல் கட்ட தகவல்கள் கிடைத்துள்ளது. இன்று காலை 7 மணி முதல் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் கிலியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×